செவ்வாய், 14 மே, 2013

அழகியல்
























சகியே !
தெய்வங்கள் எல்லாம் 
கோயிலில்தானே 
குடியிருக்கும் 
பிறகு நீ மட்டும் 
எப்படி வீட்டுக்குள்...
.............................................................................
அடிக்கடி 
வந்துவிட்டுப்போ.
அப்படியாவது 
பூத்துக்கொள்ளட்டும் 
"எங்கள் வீட்டு ரோஜா செடி"
...............................................................................
மழை நின்ற பிறகும் 
மரங்கள் தேக்கி வைத்திருக்கும் 
மழைத்துளிகளைப் போல 
நீ வந்து போன 
பிறகும் கூட 
உன் நினைவுகள் மட்டும் அப்படியே .....
..................................................................................


0 கருத்துகள்: