வியாழன், 7 ஜூன், 2012

ஈழம் மலரட்டும்...

புறப்படு  தமிழா !
புறப்படு !
நம் இனத்தின் முதுகெலும்பில்
சிங்களக்கோடரி கொண்டு தாக்கிய
சினம்பிடித்தவனின் இரத்தத்தில்
நம் தமிழை குளிர்விப்போம் !
வந்தவனை எல்லாம்
வாழ வைத்தே
வாழ்விழந்தவனே !
என் சோதரனே !
தமிழ்ச்சாதியே !
போதுமடா...

நம் தாயின் மடியில் அயலவனை
தூங்க அனுமதித்து
நீயும்  நானும்
தூக்கம் மறந்தது போதும்.

நம் சகோதரிகளை
இன வெறியனுக்கு
தின்னக்கொடுத்தது போதும்.

நம் பிஞ்சுகள் மீது
குண்டுகள் துளைத்து
குடியேறியது போதும்.

தமிழனின் மார்புகளை
சிங்களப்புழுக்கள்
தின்னு கொழுத்தது போதும்.

பள்ளங்களில் பதுங்கியே
நம் சகோதரிகள்
தமிழின் கற்பைக்
காப்பாற்றியது போதும்.

பள்ளிக்கூடங்களே
குழந்தைகளின்
பச்சை உயிர் குடித்த்தது போதும்.

இரவல் கொடுத்தே
இனத்தை இழிவு படுத்தியது போதும்.

வீரம் செறிந்தே வாழ்ந்த இனம்
வீதிக்கு வந்தது போதும்.

இனியும் கதைகள்
பேசிப்பயனில்லை.

நடுவண் அரசை நம்பியே
நாம் நாசமாய்ப் போனது போதும்.

துருப்பிடித்த புராணங்களை
தாங்கிப் பிடித்தே
தமிழன் செத்ததெல்லாம் போதும்.

போதும் .
போதும்
போதுமடா ....

நம் விழியின் சிவப்பின்
வெம்மைபட்டு
செத்து மடியட்டும் சிங்களம்.

நீயும் நானும்
மொத்தமாய்ப் புறப்பட்டால்
சிங்களம் என்னடா
சீண்டுபவன் எவனையும்
சிதைக்கலாம்.

நம் மொழியின் மீதும்
இனத்தின் மீதும்
தீப்பற்றி எரிகிற போது
தொலைக்காட்சியை
தொண்ணாந்து பார்த்தது போதும்

புறப்படு தமிழா-நீ
புலியெனப் புறப்படு!

தமிழின்  கூர்மை பட்டு
தமிழன் நெருப்பு பட்டு
எரியட்டும் சிங்களம்
இனி மலரட்டும் ஈழம்.....................






















  

0 கருத்துகள்: