வெள்ளி, 22 ஏப்ரல், 2011

மௌனம்...












விழிகளால்

மொழிகள் பேசி

விரல்களால்
சைகை காட்டி


அரும்பிய புன்னகையால்
இதழ் விரித்து


மௌனித்த இதயத்தால்
நேசம் தடவி 

தரை நிலவாய் - நீ
தடம் பதித்து   போகிறபோது

உன் கொலுசின்  சப்தங்கள்
என் காதல்  குருத்துக்களை
முத்தமிட்டு  போகுதடி...