சனி, 23 ஏப்ரல், 2011

இசையாய்

காற்றில் உதிரும்
இலைகளின்
மௌனம்...

பூக்களின் உதடுகளில்
வண்டுகளிடும் 
முத்தம்...

பூவாய்த்திறக்கும்
மொட்டுக்களின்
ரகசிய சப்தம்...

கூட்டினைவிட்டு
வெளியே வரும்
நத்தையின் நகர்வு...

பூமியின் தோள்களில்
சூரியன் எழுதும்
அதிகாலை விடியல்...

வானம் நானும்
அந்திப்பொழுதின்
மழைத்தூறல்...

பூக்களின் தலைவார
புறப்பட்டு வரும்
தென்றல்...

முதன் முதலாய்
பூமி பார்க்கும்
சாதி வர்ணம் பூசப்படாத
மழலையின் அழுகுரல்...